மனதின் துயரம் என்பது இது தான் போலும்.,
நீ பிரிந்து செல்கிறாய் என்பதை உணர்கிறேன்.,
கையில் சூடு பட்ட நிலையிலும்
உணர்ச்சி இல்லாமல் தவிக்கிறேன்.,
உன்னை நினைக்காமல் இருக்க என்
மூளைக்கு அதிக வேலை தருகிறேன்.,
இருந்தும் உண்ணும் போது கூட
உன் நினைவால் உயிர் உருக்குலைந்து போகிறது.,
உன் பிரிவை தாங்கும் அளவிற்கு
என் மனதை தயார் படுத்தும்
முயற்சியில் நான்!!!